ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக டெபாசிட் இழந்திருப்பதால், ஸ்டாலினின் செயல்பாடு குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதி முன்பு போல் செயல்பட முடியாமல் இருப்பதால், செயல் தலைவர் ஸ்டாலின் தான் அக்கட்சியின் எதிர்காலமாய் இருக்கிறார். இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ஸ்டாலின் தலைமையில் சந்தித்த திமுக, தோற்றிருந்தால் கூட பரவாயில்லை, டெபாசிட்டே வாங்க முடியாமல் போனது தான் உடன் பிறப்புகளை மிகவும் சோர்வடைய வைத்துள்ளது.
இந்த நேரத்தில் கலைஞர் நல்ல உடல்நிலையுடன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று நாம் விவாதிப்பதில் அர்த்தம் இல்லை. ஆனால், எம்.ஜி.ஆர் காலத்தில் இடைத் தேர்தல் ஒன்றில் திமுக தோற்றுப் போனதால், தொண்டர்கள் விரக்தியில் இருந்த போது, கலைஞர் கருணாநிதி பேசிய எழுச்சி உரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அவரது பேச்சிலும், நம்பிக்கையிலும் தெரியும் அந்த கம்பீரம் தான், அண்ணாவுக்கு பிறகு திமுகவை இத்தனை ஆண்டு காலம் வழிநடத்தி வந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
கலைஞரின் அந்த 'தோல்வி பேசும் வெற்றி உரை' இதோ.