Advertisment

திமுக தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழக்கு 9ம் தேதி விசாரணை

உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அறிவிப்பை வெளியிடாத மாநில தேர்தல் ஆணையர், தமிழக அரசு மீது திமுக தொடர்ந்த அவமதிப்பு வழக்கு 9ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசு மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி தலைமையிலான முதல் பெஞ்ச் அறிவிப்பு

Advertisment

தமிழகத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்துசெய்து உத்தரவிட்டது. இதனையடுத்து உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, கடந்த மே 14ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்த மனுவில் ஜூலை மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்கப்படும் என தெரிவிக்கபட்டது.

இந்த உத்தரவை மாநிலத் தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை என்று திமுக தரப்பில் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. அதில் குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயம் செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தெரிவிக்கபட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் சுந்தர் ஆகியோர் அடங்கி முதல் அமர்வு செப்டம்பர் 3ம் தேதி பிறப்பித்த உத்தரவில், செப்டம்பர் 18ம் தேதி தேர்தல் நடத்துவது தொடர்பான அட்டவணை வெளியிட வேண்டும், நவம்பர் 17 ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவையும் பின்பற்றவில்லை என தெரிவித்து மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசு ஆகியவற்றிற்கு எதிராக திமுக மாநிலங்களவை எம்.பி ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். அதில் கடந்த மாதம் 3ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாமல் உள்ள மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கபட்டது.

இந்நிலையில் இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் முறையீடு செய்தார். இதனை அடுத்து வரும் 9 ஆம் தேதி ( அக்டோபர் ) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

Chennai High Court Dmk Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment