Advertisment

கூவத்தூரில் இருந்த 122 எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே கொறடா உத்தரவு - ஓ.பி.எஸ் தரப்பு வாதம்

அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என கூவத்தூரில் இருந்த 122 எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே கொறடா உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கூவத்தூரில் இருந்த 122 எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே கொறடா உத்தரவு - ஓ.பி.எஸ் தரப்பு வாதம்

திமுக கொறடாவும், எம்.எல்.ஏ-வுமான சக்கரபாணி தாக்கல் செய்த மனுவில், கூவத்தூரில் இருந்த 122 எம்.எல்.ஏக்களுக்கு மட்டுமே கொறடா உத்தரவு பிறப்பிக்கபட்டது என ஒ.பி.எஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, விசாரணை பிப்ரவரி 22ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக திமுக கொறடாவும், எம்.எல்.ஏ-வுமான சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அரசு மீது கடந்த ஆண்டு (2017) பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் வலுக்கட்டாயமாக பேரவையில் வெளியேற்றப்பட்டோம். அதன் பிறகு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏ-க்களான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் 11 பேர் தற்போதைய தமிழக முதல்வர் கே.பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். கோவை எம்எல்ஏ அருண்குமார் வாக்கெடுப்பை புறக்கணித்தார்.

அரசுகொறடா உத்தரவை மீறி செயல்பட்ட இந்த எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி ஏற்கெனவே சட்டப்பேரவைத் தலைவரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் கடந்த ஆகஸ்டு 22 ஆம் தேதி முதல்வர் மீது நம்பிக்கையில்லை எனக்கூறி ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேரை மட்டும் சட்டப்பேரவைத் தலைவர் ஒரு தலைபட்சமாக தகுதி நீக்கம் செய்துள்ளார். எனவே ஓபிஎஸ் மற்றும் அவருக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

இதே கோரிக்கையுடன் தினகரன் ஆதரவாளரான தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ வெற்றிவேல் உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகள் அனைத்து இன்று இரண்டாவது நாளாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சட்டமன்ற விதிகளின்படி அளிக்கப்பட்ட புகாரை சபாநாயகர், பரிசீலிக்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும் என்பது அரசியல் சாசன கடமை. ஆனால், இந்த வழக்கில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் தேதி அளிக்கப்பட்ட தகுதி நீக்க புகாரை சபாநாயகர் இதுவரை பரிசீலிக்கவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை என வாதிட்டார். அரசியல் சாசன பதவி வகிப்பவர், தன் அரசியல் சாசன கடமையை செய்ய தவறும் போது அந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிடலாம். அரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய புகாரில் சபாநாயகர், பாரபட்சமாக நடந்துள்ளார் என குற்றம் சாட்டினார்.

தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இந்த வழக்கில்

பன்னிர்செல்வம் அணியினர் தாக்கல் செய்த பதில் மனுவில், கடந்த ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என கூவத்தூரில் இருந்த 122 எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொறடா உத்தரவு என்பது அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்குமானது தான். குறிப்பிட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என கூறமுடியாது. முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால், கொறடா உத்தரவு பிறப்பிக்காவிட்டாலும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக மட்டுமே வாக்களிக்க வேண்டும் ஆனால் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் அவ்வாறு செயல்படவில்லை அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

துணை முதல்வர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன்,சபாநாயகர் எந்த ஒரு முடிவும் எடுக்காத நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நீதித்துறை ஆய்வு செய்ய முடியாது. முதலில் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. சபாநாயகரிடம் அளித்த புகாரில் முடிவை அவர் அறிவித்த பிறகே நீதிமன்றம் தலையிட முடியும். கூவத்துரில் இருந்த 122 எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்க்கு பிறப்பிக்கவில்லை என தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 22 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். அன்று தொடர்ந்து துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ கள் சார்பில் வாதங்களை மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைதியநாதன் முன்வைக்க உள்ளார்.

முன்னதாக, நேற்று நடந்த முதல் நாள் விசாரணையின் போது, கட்சி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில்  நிலுவையில் இருந்தாலும், பன்னிர் செல்வம் உள்ளிட்டோர் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை என  திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

Chennai High Court Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment