Advertisment

ஒரு தொகுதி; தனிச் சின்னத்தில் போட்டி: தி.மு.க. - ம.தி.மு.க தொகுதிப் பங்கீடு நிறைவு

எதிர் வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிட ம.தி.மு.க.வுக்கு ஒரு மக்களவை தொகுதியை தி.மு.க. ஒதுக்கியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
 DMK  DMK allots one seat to MDMK in TN Lok Sabha polls 2024 Tamil News allots one seat to MDMK in TN Lok Sabha polls 2024 Tamil News

ம.தி.மு.க.வுக்கு ஒரு மக்களவை தொகுதியை ஒதுக்கிய தி.மு.க; தனிச் சின்னத்தில் போட்டி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Lok Sabha Election | Dmk | Mdmk Chief Vaiko: நாளுமன்ற மக்களவை தேர்தல்கள் ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி அரிப்புகள் அடுத்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தேசிய, மாநில அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தையை பரபரப்பாக நடத்தி வருகிறன்றன. இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 

Advertisment

தி.மு.க. கூட்டணியில் பேச்சு வார்த்தை

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியை பொருத்தவரை, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம,தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளே இப்போதும் தொடருகின்றன. எனவே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை, மற்ற அணிகளுக்கு முன்னரே தொடங்கியது.

முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்கியது. இதில் ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும், நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கும் ஒதுக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

அதே நேரம் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுடனான பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்துக்கொண்டு இருக்கிறது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க.வும் தங்கள் கட்சிக்கு கூடுதல் தொகுதி கேட்டதுடன், சொந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்று தெரிவித்தது.

3 சுற்று பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், அந்த கட்சியின் உயர்மட்ட கூட்டம் வைகோ தலைமையில் நேற்று நடந்தது. அப்போது தி.மு.க. தரப்பில் இருந்து சாதகமான தகவல் தெரிவிக்கப்பட்டதால், ம.தி.மு.க.-தி.மு.க. இடையே இன்று உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஒரு தொகுதி - தனிச் சின்னத்தில் போட்டி 

இந்த நிலையில், தி.மு.க. - ம.தி.மு.க. இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு ஒரு மக்களவை தொகுதியை தி.மு.க. ஒதுக்கியுள்ளது.

இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், "தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.விற்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். மற்ற கூட்டணிக்கு கட்சிகள் உடனான ஆலோசனைக்குபின் எந்த தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது என்பது தெரிய வரும். மாநிலங்களவை பதவி நிறைவடைய இன்னும் 15 மாதங்கள் உள்ளன. அதனால், அதுகுறித்து எந்த பேச்சுவார்த்தையும் தற்போது நடத்தவில்லை" என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Dmk Mdmk Chief Vaiko Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment