இதையடுத்து, மும்பை அந்தேரி பகுதியில் அவரை மீண்டும் காவல் துறையினர் கைது செய்தனர். மும்பை நீதிமன்றத்தில் தஷ்வந்த் ஆஜர்படுத்தப்பட்டபோது, மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைக்க வேண்டும் எனவும், வரும் செவ்வாய் கிழமை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, தஷ்வந்த் நேற்றிரவு (சனிக்கிழமை) விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார்.