Advertisment

வீடியோ: தாயை கொன்ற தஷ்வந்தை விமானம் மூலம் சென்னை அழைத்துவந்த தமிழக காவல்துறை

தனது தாயை கொலை செய்துவிட்டு தப்பியோடி மும்பையில் கைது செய்யப்பட்ட தஷ்வந்தை தமிழக காவல் துறையினர் விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீடியோ: தாயை கொன்ற தஷ்வந்தை விமானம் மூலம் சென்னை அழைத்துவந்த தமிழக காவல்துறை

தனது தாயை கொலை செய்துவிட்டு தப்பியோடி மும்பையில் கைது செய்யப்பட்ட தஷ்வந்தை தமிழக காவல் துறையினர் விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர்.

Advertisment

சென்னையை அடுத்த போரூரில், கடந்த பிப்ரவரி மாதம் 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்த தஷ்வந்த், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ஜாமீனில் வெளியில் வந்த தஷ்வந்த், கடந்த 2-ஆம் தேதி, நகைக்காக தனது தாய் சரளாவை கொன்றுவிட்டு தப்பியோடினார்.

இதையடுத்து, மும்பையில் குதிரை பந்தாய மைதானத்திலிருந்து வெளியே வந்தபோது, தஷ்வந்தை தமிழக காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், கழிவறை செல்லும்போது தஷ்வந்த் தப்பியோடினார்.

இதையடுத்து, மும்பை அந்தேரி பகுதியில் அவரை மீண்டும் காவல் துறையினர் கைது செய்தனர். மும்பை நீதிமன்றத்தில் தஷ்வந்த் ஆஜர்படுத்தப்பட்டபோது, மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைக்க வேண்டும் எனவும், வரும் செவ்வாய் கிழமை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, தஷ்வந்த் நேற்றிரவு (சனிக்கிழமை) விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார்.

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment