Advertisment

விழுப்புரத்தில் தலித் சிறுமி பாலியல் பலாத்காரம் : சிறுவன் பரிதாப பலி

14 வயது சிறுமி என்று கூட பார்க்காமல் தனத்தை பாலியல் வன்கொடுமை செய்த அந்த கும்பல் தாய் ஆராயி மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rape

விழுப்புரம் மாவட்டத்தில் 14 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அவருடைய சகோதரன் அடித்து கொல்லப்பட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூர் என்ற கிராமத்தில் ஆராயி என்பவர் மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ஆராயி வீட்டில் புகுந்த அடையாளம் தெரியாத சில நபர்கள் கொடூரத்தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும் 14 வயது சிறுமி என்று கூட பார்க்காமல் தனத்தை பாலியல் வன்கொடுமை செய்த அந்த கும்பல் தாய் ஆராயி மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து தாய் மற்றும் மகள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அரகண்டநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் தாய் மற்றும் மகளையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 23 நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்தநிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை வலுத்துவருகிறது. மேலும் இந்த கொடூரத்தை அரங்கேற்றியவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூயுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு கனிமொழி எம்பி., தனது ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment