Advertisment

பெரும்பான்மையை நிரூபிக்க கோரிய வழக்கு... வழக்கறிஞர் புகழேந்தியின் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு

எடப்பாடி பழனிச்சாமி பெருபான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்ற வழக்கறிஞர் புகழேந்தியின் மனு தள்ளுபடி

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai high court

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெருன்பான்மையை நிரூபிக்க, ஆளுநர் உடனடியாக உத்தரவிடக்கோரி கோரி வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் பொது நல மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் கடந்த பிப்ரவரி மாதம்  16 ஆம் தேதி 122 சட்ட மன்ற உறுப்பினர்கள்முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்க ஆதரவு அளித்தனர். அதன்படி  நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

Advertisment

இந்நிலையில் 19 எம்.எல்.ஏக்கள் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்து கடந்த 22 ஆம் தேதி  முதல்வர் பழனிச்சாமிக்கு கொடுத்த ஆதரவை விலக்கி கொண்டதாக தமிழக ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதனையடுத்து ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதை போல் சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் பெருன்பான்மை நிரூபிக்ககோரி தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்  ஆளுநருக்கு கடிதம் அளித்தார். 19 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை விலக்கி கொண்டதால் இந்த அரசு தனது பெரும்பான்மையை இழந்து விட்டது. எனவே உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடவில்லை எனில் குதிரை பேரம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

இதே போன்ற சூழ்நிலைகளில் உச்சநீதிமன்றம் பிறபித்த உத்தரவின் அடிப்படையில் நம்பிக்கை வாக்கெடுப்பு உடனடியாக சட்டமன்றத்தில் நடத்த முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும். இல்லை என்றால் குதிரை பேரம் நடத்த வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள் இதே கோரிக்கை தொடர்பாக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் எம்.எல்.ஏ வுமான ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிக்க வேண்டியதில்லை எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும், மனுதரார் மேல் முறையீடு செய்யலாம் என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனார்.

Mk Stalin Dmk Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment