Advertisment

‘மெர்சல்’ தணிக்கை சான்றை திரும்ப பெற உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் மனுதாக்கல்!

மெர்சல் திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றை திரும்ப பெற உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mersal, Censor certificate, Chennai high court, Actor vijay,

மெர்சல் திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றை திரும்ப பெற உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த அஸ்வத்தாமன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், மெர்சல் திரைபடத்தில் வரும் காட்சிகள் இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் எதிராக அமைந்துள்ளன, அத்துடன் ஜி.எஸ்.டி வரி விதிப்பு மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து தவறான கருத்துகளை கொண்டுள்ளன. இது மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதை சென்சார் போர்ட் எவ்வாறு தணிக்கை சான்று வழங்கியது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து கடந்த 20-ம் தேதி மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பியுள்ளேன். அதனால், மெர்சல் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும், மேலும்  படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றை சென்சார் வாரியம் திரும்ப பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Chennai High Court Actor Vijay Mersal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment