முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தையும் ஆண்மையில்லாத தலைவர்கள் என ஆடிட்டர் குருமூர்த்தி விமர்சனம் செய்ததற்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் தமிழக அரசியலிலும், அதிமுகவிலும் கடுமையான மாற்றங்கள் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன. ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை அதிமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து தெரிவித்து வந்தார். சசிகலா மீது சில குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார்.
மேலும், அதிமுக இரு அணிகளாக பிரிந்திருந்தபோது, அவற்றின் இணைப்புக்கான பேச்சுவார்த்தையில் குருமூர்த்தி முக்கிய பங்கு வகித்ததாகவும் சொல்லப்பட்டது. அதிமுக அமைச்சர்களே இதுதொடர்பாக குருமூர்த்தி வீட்டுக்கே சென்று ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இரு தரப்புமே இதை உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக உயர்மட்ட குழு நேற்று (திங்கள் கிழமை) கூடியது. அதில், டிடிவி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட 9 பேரை பொறுப்புகளிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கி அதிமுக அறிவித்தது.
இதுகுறித்து, தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த குருமூர்த்தி, “ஆறு மாதங்கள் கழித்து இந்த நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர். ஆண்மையில்லாதவர்கள் (ஆங்கிலத்தில், ‘இம்பொட்டன்ட்’ என குறிப்பிட்டார்) ”, என குறிப்பிட்டிருந்தார்.
These weakmen took action after almost six months.. impotent leaders... After shock RK Nagar poll defeat, AIADMK cracks whip against nine Dhinakaran men - Times of India https://t.co/l6PPLhpYHb via @timesofindia
— S Gurumurthy (@sgurumurthy) 25 December 2017
முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் விமர்சித்திருப்பது அதிமுகவினரை கோபமடைய செய்திருக்கிறது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ஆடிட்டர் குருமூர்த்தி எந்த முகத்தில் பேசுகிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஆண்மையில்லாதவர்கள் தான் இவ்வாறு பேசுவர். அதிமுக நிர்வாகிகள் காங்கேயம் காளை போன்று இயக்கத்தை கட்டிக்காத்து வருகின்றனர். குருமூர்த்தி நாவடக்கம் காக்க வேண்டும்.”, என காட்டமாக கூறினார்.
மேலும், அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தையில் குருமூர்த்தியின் பங்கு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அவர் என்ன கிங்மேக்கரா?”, என ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரின் கண்டனத்துக்கு ட்விட்டரில் பதிலளித்த குருமூர்த்தி,”தமிழக அரசு எனது அறிவுரையின்படி நடக்கவில்லை என்பதை ஒத்துக் கொண்ட அமைச்சர் ஜெயக்குமாருக்கு நன்றி”, என தெரிவித்துள்ளார்.
I thank the TN minister for dispelling the wrong impression the Edappadi OPS govt is running on my advice. I never advised them as govt ever. As an independent writer, I will continue to express my views on how parties and leaders conduct themselves whether they like it or not
— S Gurumurthy (@sgurumurthy) 26 December 2017
I have been expressing similar views in the Thuglak magazine in Q&A column, continuously, about the Edappadi government. There is nothing new I have said now about how weak the ADMK leadership is. https://t.co/0aiz5Z8yFD
— S Gurumurthy (@sgurumurthy) 26 December 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.