கோவையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலை பள்ளமும், குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
செல்வபுரம் பைபாஸ் சாலையில் தேங்கி இருக்கும் மழை நீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
தேங்கியிருக்கும் தண்ணீரை போலீஸ் போக்குவரத்து உதவி ஆய்வாளர் முருகேசன் சாலையில் மண்ணைக் கொட்டி பள்ளத்தை மூடினார்.
பணியாளர்களுடன் சேர்ந்து காவலரும் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“