Advertisment

தீராத தாகம்- கோவை மலைக் கிராமத்தில் கூட்டமாக வந்து தண்ணீர் அருந்திய காட்டு யானைகள்

நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து வருதால் வன விலங்குகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்கு படையெடுக்கின்றன.

author-image
WebDesk
New Update
Elephant

Coimbatore

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து வருதால் வன விலங்குகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்கு படையெடுக்கின்றன.

Advertisment

அந்தவகையில் தடாகம் வீரபாண்டிபுதூரை அடுத்த மூலக்காடு எனும் மலைக் கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஊரின் எல்லையில் வனவிலங்குகள், பறவைகள் நீர் அருந்துவதற்கு தண்ணீர் தொட்டி ஏற்பாடு செய்து, தண்ணீர் நிரப்பி வைக்கின்றனர்.

நேற்று மாலை அப்பகுதிக்கு குட்டிகள் உடன் வந்த 10 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்தின. இதனை அங்கு இருந்த ஒருவர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டு உள்ளார்.

தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment