அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், "சென்ட்ரலில் இருந்து ஒரு இயந்திரம் வந்துக் கொண்டிருக்கிறது. அந்த இயந்திரம் மூலம், சென்னை சில்க்ஸ் கட்டிடம் முழுவதுமாக தரைமட்டமாக்கப்படும். தானியங்கியாக செயல்படவுள்ள அந்த இயந்திரம், மூன்று நாளில் இந்த கட்டிடத்தை முழுவதும் இடித்துவிடும். இன்னும் சில மணி நேரத்தில் அந்த இயந்திரம் வந்துவிடும்.
May 2017
இங்கே வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக வெடி வைத்து தகர்க்கப்படவில்லை. முதலில் இந்த பணியை முடித்தபின், சென்னை சில்க்ஸ் நிறுவனம் விதிமுறை மீறலில் ஈடுபட்டிருக்கிறதா என்பதை விசாரணை செய்து, அதன்பின் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் சட்டத்திற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்றார்.