Advertisment

குட்கா ஊழல் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

குட்கா ஊழல் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குட்கா ஊழல் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

பான்மசாலா உள்ளிட்ட பொருட்களை தமிழகத்தில் விற்பனை செய்ய லஞ்சம் பெற்றதாக அமைச்சர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மீதான குற்றசாட்டு குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றமத்தில் தி.மு.க தரப்பில் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisment

அதில், கடந்த 2011 ஆம் ஆண்டு மத்திய அரசு குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனைக்கு தடைவிதித்தது. இதனையடுத்து இந்த பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்யவும் உச்ச நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்தது. இதனை தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் 2013 ஆம் ஆண்டு மே மாதம் அறிவித்தார்.

இதன் அடிப்படையில் கடந்த 2015 ஆம் ஆண்டு குட்கா, பான் மசாலாவுக்கு தமிழக அரசும் தடை விதித்து அரசிதழில் அறிவிப்பாணை வெளியிட்டது. இந்நிலையில், எம்.டி.எம் (MDM) பான் மசாலா நிறுவனத்தில் வருமான வரித்துறையினரின் நடத்திய சோதனையில் அந்நிறுவனம் சுமார் 250 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் அமைச்சர் விஜய பாஸ்கர், காவல்துறை டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோருக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. எனவே இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சி.பி.ஐ அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், காவல்துறை டி.ஜி.பி., மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் உள்ளிட்டோர் செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக சட்டமன்றத்திற்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து சென்றதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக பேருக்கு சட்டமன்ற உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக தி.மு.க தொடுத்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று தி.மு.க தரப்பு வழக்கறிஞர் நீலகண்டன் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வில் முன் முறையிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குட்கா வழக்கை செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு பதிலாக 7 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அனுமதி அளித்தனர்.

Mk Stalin Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment