Advertisment

இறக்குமதி மணலை விற்க கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசாணை: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

இறக்குமதி செய்யப்படும் மணலை விற்க கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசாணைக்கு தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இறக்குமதி மணலை விற்க கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசாணை: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை விற்க கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசாணைக்கு தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை பொதுப்பணித்துறை தான் விற்பனை செய்யும் எனவும், சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்த கூடாது என கட்டுப்பாடுகள் விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி பொதுப்பணித்துறை அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில், தமிழகத்தில் அனைத்து மணல் விற்பனையையும் பொதுப்பணி துறை மட்டுமே நடத்த வேண்டும் எனவும், இறக்குமதி செய்யப்படல் அதனை தமிழக அரசிடம் அளித்து அரசு தான் அதனை விற்பனை செய்யும் என அந்த அரசாணையில் தெரிவிக்கபட்டது.

தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து, தினமலர் கோவை பதிப்பின் வெளியீட்டாளர் ஆதிமூலம் தாக்கல் செய்த பொது நல மனுவில், மணல் விற்பனையாளர்கள், பயன்பாட்டாளர் உரிமையை பறிக்கும் வகையில் தமிழக அரசு எடுத்துள்ள முடிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதாக உள்ளது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தமிழக அரசின் அரசாணை உள்ளது. மேலும் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மணல் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஓரு தலைபச்சாமன நடவடிக்கை எனவே அரசாணைக்கு தடைவிதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து இறுக்குமதி செய்யப்படும் மணலை பொதுபணித்துறை மட்டுமே விற்கும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்து அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இறக்குமதி செய்யப்படும் மணலை விற்பதற்கு கட்டுபாடுகளை விதிக்க தமிழக அரசிற்கு அதிகாரம் இல்லை. தமிழக அரசின் அரசாணையானது மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிடும் வகையில் இருப்பதாகவும், இந்த அரசாணை வெளியிடுவதற்கு பின்னனியில் மணல் மாஃபியா செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார்.

இதனையடுத்து, மனுவுக்கு ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 23 ஆம் தேதி தள்ளிவைத்தனர்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment