Advertisment

சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு ஸ்டாலின் எந்த வகையில் காரணம்: நீதிமன்றம் சரமாரி கேள்வி

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், எந்த வகையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறார் என சென்னை உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு ஸ்டாலின் எந்த வகையில் காரணம்: நீதிமன்றம் சரமாரி கேள்வி

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், எந்த வகையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறார் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisment

தமிழகம் முழுவதும் பல இடங்களில் திமுக சார்பில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, சேலம் மாவட்டத்தில் முதல்வரின் தொகுதியான எடப்பாடி தொகுதியில் உள்ள கட்சராயன்பாளையம் ஏரியிலும் தூர் வாரும் பணிகளை திமுக மேற்கொண்டது. ஆனால், தூர்வாரும் போது அள்ளிய வண்டல் மணலை முறைகேடாக சிலர் அள்ளிச் சென்றுள்ளனர் என அண்மையில் புகார் எழுந்தது. அந்த ஏரியை பார்வையிட சென்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை காவல்துறையினர் கடந்த வாரம் கோவையில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதையடுத்து, வரும் காலங்களில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை தூர் வாரும் பணியில் திமுக ஈடுபடும் போது, அதற்கு தமிழக அரசும், காவல்துறையும் தடை விதிக்க கூடாது. ஏரி தூர்வாரப்படுவதை பார்வையிட செல்லும் எதிர் கட்சி தலைவர் ஸ்டாலினை அரசு அதிகாரிகள், மற்றும் காவல் துறையினர் தடுக்கக்கூடாது என கோரி திமுக சட்டப்பிரிவு செயலாளர் கிரிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்,"மு.க.ஸ்டாலின் அதிக அளவில் தொண்டர்களோடு வருவதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற காரணத்தாலே அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது" என்றார்.

அப்போது ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், "எதிர்கட்சி தலைவர் அமைச்சர் அந்தஸ்த்தில் உள்ளார். மேலும் அவருக்கு உயர் பாதுகாப்பு (z பிரிவு) வழங்கப்பட்டுள்ளது , எனவே அவர் எங்கு சென்றாலும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும். எனவே திடீரென அவர் எங்கும் செல்லவில்லை. சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கவும் இல்லை" என வாதிட்டார். மேலும் அரசு செய்ய வேண்டிய பணியை தற்போது தங்கள் தரப்பினர் செய்து வருவதாகவும் அவர் வாதிட்டார்.

இதனையடுத்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது காவல்துறையின் கடமை. ஆனால் மு.க.ஸ்டாலின் எந்த வகையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறார்? எனவும், தூர்வாரும் பணிகளை பார்வையிட சென்ற அவரை தடுத்து நிறுத்துவது ஏன்? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் மனு குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும் படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கை பிற்பகலுக்கு நீதிபதி தள்ளிவைத்தும் உத்தரவிட்டுள்ளார்.

Chennai Mk Stalin Dmk High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment