Advertisment

வேலைநிறுத்தத்தை ஜாக்டோ-ஜியோ உடனே கைவிட வேண்டும்;1 மணி நேரத்தில் பணி இழக்க நேரிடும்: நீதிமன்றம் எச்சரிக்கை

வேலைநிறுத்தப் போராட்டத்தை உடனே கைவிட வேண்டும் என ஜாக்டோ - ஜியோ அமைப்பினருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
jacto geo

வேலைநிறுத்தப் போராட்டத்தை உடனே கைவிட வேண்டும் என ஜாக்டோ - ஜியோ அமைப்பினருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும். சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 7-வது ஊதிய குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே மூன்று கட்ட போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், செப்டம்பர் மாதம் 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்தனர். இதனிடையே, தமிழக அரசுடன் அந்த அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வருடன் ஈரோட்டில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். முதல்வர் அளித்த நம்பிக்கையை தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அந்த அமைப்பின் சில பிரிவுகள் அறிவித்தன. ஆனால், அதற்கு பெரும்பாலானோர் ஆதரவளிக்கவில்லை. அதேசமயம், அந்த அமைப்பின் சில பிரிவுகள் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவித்தனர். அதன்படி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சேகரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதன் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், ஜாக்டோ ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. எனினும், தங்களது போராட்டத்தை கைவிடாமல் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் வருகிற 15-ம் தேதி (இன்று) நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.

அதன்படி இன்று நடைபெற்ற விசாரணையின் போது, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேரில் ஆஜராகினர். அப்போது, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கூறும் கருத்துகளை ஊடகங்களின் வாயிலாக பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். நீதிமன்றத்தை கேலிக் கூத்தாக்க வேண்டாம் என நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும், நீதிமன்றத்தை நாடாமல் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? காலாண்டு தேர்வு நடக்கும் போது, ஆசிரியர்களின் போராட்டம் மாணவர்களை பாதிக்காதா? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ஊழியர்களின் குறைகளை தீர்க்க எத்தனையோ வழிகள் உள்ளன என கூறியதுடன், வேலை நிறுத்தத்தை உடனே கைவிட வேண்டும் எனவும், போராட்டத்தை கைவிடுவது குறித்து முடிவெடுத்து நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

அதேசமயம், போராட்டத்தை எந்த வித நிபந்தனையுமின்றி வாபஸ் பெற்றால், வருகிற திங்கள்கிழமை தலைமைச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிடுவதில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தயக்கம் காட்டினர். இதனால் கடுப்பான நீதிபதிகள், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ஒரு மணி நேரத்தில் பணியில் இருந்து நீக்க முடியும் என எச்சரிக்கை விடுத்தனர். பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியில் நீதிமன்றம் தொடர்ந்து ஈடுபடும் என உறுதி அளித்த நீதிபதிகள், ஆலோசனை நடத்தி பதிலை தெரிவிக்க அவகாசம் அளித்து விசாரணையை சிறிது நேரம் ஒத்தி வைத்தனர்.

Tamilnadu High Court Jacto Geo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment