Advertisment

'வைகோ ஒழிக...!' - உடன்குடியில் பா.ஜ.க.வினர் கருப்பு கொடி, கல்வீச்சு.. போலீஸ் தடியடி!

நாசக்கார கூட்டம் இந்த மோடியின் கூட்டம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'வைகோ ஒழிக...!' - உடன்குடியில் பா.ஜ.க.வினர் கருப்பு கொடி, கல்வீச்சு.. போலீஸ் தடியடி!

உடன்குடியில் வாகன பிரசார செய்த வைகோவுக்கு பா.ஜ.க.வினர் கருப்பு கொடி காட்டினர். அப்போது வைகோ மீது கல்வீசப்பட்டதால், போலீஸ் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை, செய்துங்கநல்லூரில் இருந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, வாகன பிரச்சார பயணத்தை தொடங்கினார். அவர் இரவு 9.45 மணியளவில் உடன்குடி சந்தையடி தெரு வழியாக பிரசார வேனில் நின்றவாறு வந்தார். அப்போது அங்கு பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், ஒன்றிய செயலாளர் திருநாகரன் தலைமையில் பா.ஜ.க.வினர் கருப்பு கொடி ஏந்தி நின்றனர். அவர்கள் திடீரென்று வைகோவின் பிரசார வாகனம் முன்பு நின்று, ‘வைகோ ஒழிக‘ என்று கோஷமிட்டனர்.

அப்போது வைகோவின் பிரசார வேனின் மீது சரமாரியாக கல் வீசப்பட்டது. உடனே வைகோ பிரசார வேனுக்குள் அமர, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருச்செந்தூர் டிஎஸ்பி தீபு தலைமையிலான போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கிருந்த அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். பின்னர் சிறிதுநேரம் கழித்து வைகோ பேசுகையில், "இங்கு பா.ஜ.க. வினர் கருப்பு கொடி காட்ட தயாராக உள்ளதாக எனக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வேலையை அவர்கள் செய்யட்டும், நாம் அமைதியாக செல்வோம் என்று கூறி வந்தேன்.

அவர்கள் கருப்பு கொடி காட்டி விட்டு சென்று இருக்கலாம். என் மீது கல் வீசி தாக்கி உள்ளனர். (அப்போது வைகோ தனது கையில் வைத்திருந்த 5 கற்களை காண்பித்தார்). நான் இங்கு ஓட்டு கேட்டு வரவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி பிரசார பயணம் மேற்கொண்டு உள்ளேன். அப்படியெனில் பா.ஜ.க.வினர் ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என்கிறீர்களா? பா.ஜ.க.வின் கூட்டத்தில் புகுந்த புல்லுருவிகள் என் மீது கல் வீசினர். இதற்கு நான் பயந்து போக மாட்டேன். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று பள்ளிவாசல், தேவாலயங்கள், கோவில்களில் மக்கள் ஒற்றுமையுடன் வழிபட்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நான் ம.தி.மு.க.வை தொடங்கி 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் என் மீது எந்த கட்சியினரும் கல்வீசியது கிடையாது. எங்களுடைய கட்சி தொண்டர்களும் எந்த வன்முறையிலும் ஈடுபட்டது கிடையாது. பா.ஜ.க.வினரின் கல்வீச்சில் ம.தி.மு.க. மாநில தொண்டர் அணி அமைப்பாளர் பாஸ்கர சேதுபதி, சங்கொலி சந்திரன், மரியசெல்வம் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்" என்றார்.

மேலும், நாசக்கார கூட்டம் இந்த மோடியின் கூட்டம்... நாசக்கார கூட்டம் இந்த மோடியின் கூட்டம் என திரும்ப திரும்ப கூட்டத்தினரை பார்த்து வைகோ ஆக்ரோஷமாக பேசினார்.

Vaiko
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment