Advertisment

பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்மநபர்: சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் பரபரப்பு

கபாலீஸ்வரர் கோவில் வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
An unidentified person set fire near the temple gate in Mylapore Chennai

இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் திருக்கோவில் வாசலில் மர்மநபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு (பிப்.6,2024) நடந்துள்ளது. இது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்தச் சம்பவம் நடந்தபோது அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

Advertisment

இந்தத் தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில் வாசலில் தீ வைத்த மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.

இதற்கிடையில் மர்ம நபர் மது போதையில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கோவிலில், வாசலில் கூட பாதுகாப்பு இல்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வாசலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fire Accident Crime
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment