Advertisment

ஓசூரில் திடீரென பற்றி எரிந்த இ-பைக்; பெரும் விபத்து தவிர்ப்பு

ஓசூரில் வெயில் காரணமாக எலக்ட்ரானிக் பைக் ஒன்று திடீரென தீப்பிடித்து எறிந்த நிலையில் இந்த விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த சேமிப்பு கிடங்கிலும் தீ பரவியது.

author-image
WebDesk
New Update
Electric bike caught fire in Hosur

ஓசூரில் மின்சார பைக் ஒன்று தீப்பற்றி எரிந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Fire Accident | தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.

இந்த நிலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அப்போது திடீரென வெப்பம் தாங்காமல் தீப்பிடித்து எரிந்து வரும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

Advertisment

இதற்கிடையில், ஓசூரில் நேற்று (ஏப்.23,2024) வெயில் காரணமாக திடீரென எலக்ட்ரானிக் பைக் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

இந்தப் பைக்கில் வந்தவர் சுதாரித்துக் கொண்டு உயிர் தப்பிய நிலையில் அந்த பைக் முழுமையாக எரிந்ததது. இதனால் தீ அருகில் இருந்த பிளாஸ்டிக் மற்றும் இரும்பு குடோனிலும் பரவியது.

இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பழைய பொருள்கள் எரிந்து சாம்பலாகின. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Fire Accident
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment