Advertisment

காவிரி தீர்ப்பு விவகாரம்: பிப்.22ல் முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

காவிரி நீர் விவகாரத்தில் ஆலோசனை நடத்த, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காவிரி தீர்ப்பு விவகாரம்: பிப்.22ல் முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

காவிரி தீர்ப்பு விவகாரத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிப்ரவரி 22ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

2007 ம் ஆண்டு காவிரி நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பில், தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கில், கடந்த 16ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி, தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். தமிழகத்திற்கு ஏற்கனவே திறக்கப்பட்டு வந்த 14.75 டிஎம்சி குறைக்கப்பட்டது. இந்த 14.75 டிஎம்சி தண்ணீர் கர்நாடகாவுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி இதுவரை ஆண்டிற்கு, தமிழகத்திற்கு 492 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, இனி தமிழகத்திற்கு ஆண்டிற்கு 404.1 டிஎம்சி மட்டுமே கிடைக்கும். இந்த தீர்ப்புக்கு கர்நாடகம் வரவேற்பு தெரிவித்த நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

இந்த நிலையில், காவிரி விவகாரம் குறித்து இன்று முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், வரும் 22ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  காவிரி விவகாரத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

More Details Awaited...

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment