அதிமுக தொண்டர்கள் மட்டுமன்றி மொத்த தமிழக அரசியல் வட்டாரமும் உற்று நோக்கிய அதிமுக பொதுக்குழு சென்னையை அடுத்த வானகரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் கூடியது.
இரட்டை இலையை மீட்பது. பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் ரத்து. இனி அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியே கிடையாது. ஜெயலலிதாவிற்கு பிறகு இனி யாரும் பொதுச் செயலாளர் கிடையாது. அதற்காக அதிமுக சட்டவிதியில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.