Advertisment

இரட்டை இலை யாருக்கு? விசாரணையை அக்., 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு விசாரணை தேர்தல் ஆணைத்தில் நடைபெற்று வருகிறது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
AIADMK, TTV Dinakaran, CM Edappadi Palanisamy, O Panneer selvam, Two leaves, Live updates, Election commission,

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டது. சசிகலா அணி என்றும், ஓபிஎஸ் அணி என்றும் இரு அணிகளாக இருந்தது. இதனிடையே, ஜெயலலிதா மறைவினால் காலியிடம் ஏற்பட்ட ஆர்.கே நகர் தொகுதியில் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அப்போது, ஓ பன்னீர் செல்வம் தரப்பிலும், சசிகலா தரப்பிலும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரப்பட்டன. இதனால், இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Advertisment

அவர்கள் வேறு சின்னங்களில் போட்டியிட இருந்த நிலையில், பணப்பட்டுவாடா புகாரால் அப்போது ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, சசிகலா, டிடிவி தினகரனை ஓரம் கட்டடியதனால், எடப்பாடி பழனிசாமி-ஓ பன்னீர் செல்வம் அணி இணைப்பு நடைபெற்றது. இந்த நிலையில், டிடிவி தினகரன் தரப்பிலும், எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் இரட்டை இலை சின்னத்தை கோரி வருகின்றனர். இது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 6-ம் தேதி இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் தங்களது வாதத்தை முன்வைத்தனர். ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணியினர் தரப்பில் தங்களுக்கு 44 எம்.பி-க்கள், 116 எம்.எல்.ஏ-க்கள், 2000-க்கும் மேற்பட்ட பொதுக்குழுவினரின் ஆதரவு இருப்பதாக வாதிடப்பட்டது. ஆனால், அவை கட்டாயப்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் என டிடிவி தனகரன் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள், இரட்டை இலை தொடர்பான விசாரணையை அக்டோபர் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இதனிடையே, விசாரணையை 13-ம் தேதியில் இருந்து 21-ம் தேதிக்கு மாற்ற வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால், வழக்கு விசாரணை 16-ம்(இன்று) தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு விசாரணை தேர்தல் ஆணைத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டிடிவி தினரகன் தரப்பில் வழக்கறிஞர் விஜய், அஷ்வினி குமார் ஆகியோர் வாதடினர். ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஸ்வநாதன், வைத்தியநாதன், குருகிருஷ்ண குமார் ஆகியோர் வாதாடினர்.

5:00 இரட்டை இலை தொடர்பான விசாரணை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

4:45  பொதுச்செயலாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய முடியாது. டிடிவி தினகரன் தரப்பு வாதம் நிறைவு

4:40 ஓ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தரப்பு தான் அவ்வாறு இரட்டை இலை சின்னத்தை முடக்கும் வகையில் செயல்படுகின்றனர். பிரமாணப் பத்திரத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த பின்னரே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என டிடிவி தரப்பு வாதம்

4;15 இரட்டை இலை சின்னத்திற்காக காத்திருக்கும் கூட்டம்

publive-image

3:50 திமுக, காங்கிரஸ் உடன் சேர்ந்து டிடிவி தினகரன் தரப்பினர் சேர்ந்து கொண்டு இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சி என்றது ஈ.பி.எஸ்-ஓ.பி.ஸ் தரப்பு

3:40 பிரமாணப் பத்திரங்ளை சரிபார்ப்பது என்பது எங்களின் பணி அல்ல என தேர்தல் ஆணையம் பதில்

3:35 சாட்சிகள், சட்டத்தின் படி பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் வாதம்

3:30 டிடிவி தினகரன் மனுத்தாக்கலை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. யாரையும் அழைத்து விசாரணை மேற்கொள்ள முடியாது. எனவே, எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கும் பட்சத்தில் அது ஏற்றுக் கொள்ளப்படும்.

3:05 டிடிவி தரப்பு : ஒ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரங்களில் குழறுபடிகள் உள்ளதாக புதியதாக மனுத்தாக்கல் செய்தனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரங்களில் 6 பேரின் கையெழுத்துக்கள் பொருந்தவில்லை. அதனை நிரூபிக்க தயாகராக இருக்கிறோம். செப்டம்பர் 29-ம் தேதிக்கு பின்னர் ஒபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஏற்கக் கூடாது.

இரட்டை இலை சின்னம் குறித்தமுந்தைய செய்தி...

Election Commission Two Leaves Symbol
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment