மஞ்சள் துண்டு, கருப்பு கண்ணாடி, தெளிந்த பேச்சு இவைதான் திமுக தலைவர் கருணாநிதியின் அடையாளம். சிறு குழந்தையும் அவரை அடையாளம் கண்டுகொள்ள இவை போதும். ஆனால், இந்த அடையாளங்களுள் ஒன்று இப்போது மாறியிருக்கிறது. கருப்பு கண்ணாடி. மருத்துவர்கள் அறிவுரையை ஏற்று 46 ஆண்டுகள் கழித்து அவருடன் ஒட்டியிருந்த கருப்பு கண்ணாடிக்கு பதில் வேறொரு கண்ணாடி அவருக்கு அணிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த புதிய கண்ணாடி வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், லேசானதும் கூட.
விஜயா ஆப்டிக்கல்ஸ் மூலம் 40 நாட்கள் ஆலோசித்து, கருணாநிதிக்கு ஏற்ற கண்ணாடி ஜெர்மனிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.
பழைய கருப்பு கண்ணாடி கூடுதல் எடையுடன் இருப்பதால், அவரது கண்ணில் அழுத்தத்தை ஏற்படுத்தி வலியை உண்டாக்குவதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கருணாநிதி அணிந்திருந்த பழைய கருப்பு கண்ணாடி கடந்த 1971-ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் அவருக்கு கண் அறுவை சிகிச்சைக்குப் பின் அணிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.