காவிரி மேலாண்மை வாரியத்தினை அமைத்திடக் கோரி, அதிமுக சார்பில் வரும் 25 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுமென அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பில் 5 நாள் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஏப்ரல் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை 5 நாட்கள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஏப்ரல் 25-ம் தேதி நாகை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஏப்ரல் 26-ம் தேதி தஞ்சாவூர், 27-ம் தேதி திருச்சி, மற்றும் 28-ம் தேதி திருவாரூர், கரூரில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
ஏப்ரல் 29-ம் தேதி கடலூர், புதுக்கோட்டை, மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. நாகையில் ஓ.பன்னீர்செல்வம், ஓ.மணியன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் அரியலூர், பெரம்பலூரில் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், ராஜேந்திரன், ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் என்றும், தஞ்சையில் ஆர்.வைத்திலிங்கம், தங்கமணி, துரைக்கண்ணு தலைமையில் 26-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.