Advertisment

தலித் இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்த விவகாரம் : நெல்லையில் 6 பேர் கைது

நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து கொடூரமாக தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
tyu

நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து கொடூரமாக தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisment

நெல்லை மணி மூர்த்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த  இளைஞர்கள் மனோஜ் குமார், மாரியப்பன் ஆகியோர் கடந்த 30ம் தேதி தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். குளித்துவிட்டு வீடு திரும்பியபோது, 6 பேர் கொண்ட கும்பல் என்ன சாதி என்று கேட்டுள்ளனர். மேலும் பட்டியலின சமூகத்தினர் என தெரிந்ததும் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கியுள்ளனர். அவர்கள் மீது சிறுநீர் கழித்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து செல்போன்களை திருடி உள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த இருவரும் திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில் இவரது உறவினர்கள் இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதை அடுத்து, 6 பேரை கைது செய்துள்ளனர்.  பொன்னுமணி, ஆயிரம், நல்லமுத்து, ராமர், சிவா , லட்சுமணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது வன்கொடுமை, வழிப்பறி, ஆயுதங்களால் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment