டென்னிஸ் உலகின் ராணி செரீனா வில்லியம்ஸ் மற்றும் அவரது காதலர் அலெக்சிஸ் ஒஹானியனின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. செரீனா வில்லியம்ஸ்க்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஒலிம்பியா என காதல் ஜோடி பெயர் சூட்டினர். தங்கள் குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டது அற்புத நிகழ்வாக அமைந்தது.
தன் திருமணத்திற்காக செரீனா வில்லியம்ஸ்கு அவரது கணவர் அலெக்சிஸ் எழுதிய காதல் வார்த்தைகள் சில:
“விளையாட்டில் மட்டுமல்லாமல், நீ எல்லாவற்றிலும் எப்போதும் சிறந்தவள். ஒரு தாயாக, மனைவியாக இருப்பது குறித்து பேசுகிறேன். நம்முடைய கதையில் இன்னும் பல அத்தியாயங்கள் எழுத நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”