Advertisment

தென் இந்திய அளவிலான கால்பந்து போட்டி: கேரளா, தஞ்சை அணிகள் அபார வெற்றி

பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற தென்னிந்தியா அளவிலான கால்பந்து போட்டிகள் கோவை புலியகுளம் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
south india level football tournament in coimbatore Tamil News

கோவை புலியகுளம் பகுதியில் நடைபெற்ற தென்னிந்தியா அளவிலான கால்பந்து போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை புலியகுளம் கால்பந்து கழகம் சார்பில் ஆண்டுதோறும் கால்பந்து போட்டிகள் நடைபெறும் ,அதே போல இந்த ஆண்டுக் தென்னிந்தியா அளவிலான ஐவர் கால்பந்து போட்டிகள் புலியகுளம் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

Advertisment

14 மற்றும் 17-வயது, ஓபன் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 70 அணிகள் பங்கேற்றனர். 

நான்கு நாட்களாக விறுவிறுப்பாக நடந்த கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் 14 வயது பிரிவில் கேரளா அணியும், 17வயது பிரிவில் தஞ்சாவூர் அணியும், ஓபன் பிரிவில் கேரளா அணியும் அபார வெற்றி பெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், துணை ஆணையர் சரவணகுமார் ஆகியோர் பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment