மூன்று போட்டிகள் கொண்ட இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரின் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று மதியம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, பவுலிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளும் 1-1 என வெற்றிப் பெற்று சமநிலையில் இருப்பதால், இப்போட்டியில் வெல்லும் அணி கோப்பையை கைப்பற்றும். அப்படி, இலங்கை வெல்லும் பட்சத்தில், இத்தனை வருட கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக, இந்திய மண்ணில் ஒருநாள் கோப்பையை கைப்பற்றி சரித்திரம் படைக்கும்.
இந்திய அணியில் ஒரு மாற்றமாக, உடல்நலம் குன்றியுள்ள தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக, குல்தீப் யாதவ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இலங்கை அணியிலும் திரிமன்னேவுக்கு பதிலாக சதீர சமரவிக்ரமா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இப்போட்டியின் தொடக்கம் முதல் முடிவு வரை லைவ் ஸ்கோர் அப்டேட்டுகளை உடனுக்குடன் ietamil.com-ல் நீங்கள் காணலாம்.