pro-kabaddi-league: 10-வது புரோ கபடி லீக் திருவிழா இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.
இந்த தொடரில் நேற்று (திங்கள்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இரவு 8 மணிக்கு நடந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 35 - 32 என்கிற புள்ளிகள் கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 38 - 36 என்ற புள்ளிகள் கணக்கில் உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“