நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ‘பிளே ஆஃப்’ சுற்றின் இரண்டு ஆட்டங்கள் புனேயில் நடைபெறுகிறது. 'எலிமினேட்டர்' ஆட்டம் மே 23ம் தேதியும், 'குவாலிஃபயர் 2' ஆட்டம் மே 25ம் தேதியும் அங்கு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் புனேயில் நடைபெற இருக்கும் இரண்டு ‘பிளே ஆஃப்’ ஆட்டங்களும் அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது.
காவிரி போராட்டம் காரணமாக சென்னையில் நடைபெற இருந்த போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டது. சென்னையில் நடக்கவிருந்த போட்டிகள் அனைத்தும் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. கடந்த 10ம் தேதி மட்டும், ஒரேயொரு போட்டி சென்னையில் நடைபெற்றது.
இந்த நிலையில், புனேயில் நடைபெற இருந்த 'பிளே ஆஃப்' சுற்றின் 2 ஆட்டங்கள் லக்னோவுக்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 50 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் லக்னோவில் ஸ்டேடியம் இருப்பதால் அங்கு மாற்றப்பட அதிகமான வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ஆனாலும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார். கிரிக்கெட் வாரிய முன்னாள் செயலாளர் நிரஞ்சன்ஷா ராஜ்கோட்டில் ‘பிளே ஆஃப்’ சுற்று ஆட்டத்தை நடத்துவதில் ஆர்வமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.