இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே டெல்லியில் நடந்த 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி தற்காலிக நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டெல்லியில் நடைபெறும் இந்த போட்டியில் முதல் இன்னிங்கிஸில் இந்தியா ஏழு விக்கெட்டுகளை இழந்து 536 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. 2வது நாள் போட்டியின் போது, டெல்லியில் சுற்றுச் சூழல் காரணமாக இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து பில்டிங் செய்தனர். மூச்சுத்திணறல் காரணமாக சுமார் 30 நிமிடம் போட்டி நிறுத்தப்பட்டது. ஆட்ட நேர இறுதியில் இலங்கைஇ அணி, 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று காலை 3 வது நாள் போட்டி தொடங்கியது. போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் போட்டி தொடங்கி நடந்து வருகிறது. இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது.
3வது நாள் உணவு இடைவேளைக்குப் பின்னர் இலங்கை வீரார் மேத்யூ சதம் விளாசினார். அவர் 111 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வின் சுழலில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்தார். அதனையடுத்து சண்டிமால் 265 பந்துகளில் 100 ரன்களை எட்டினார். இதன் மூலம் இலங்கை அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்களை எடுத்துள்ளது.
ஆட்ட நேர இறுதியில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்களை எடுத்திருந்தது. இலங்கை அணி இந்திய அணியை விட 180 ரன்கள் பின் தங்கியுள்ளது.
டெஸ்ட் போட்டியின் நேரடி ரன் விபரங்களை தொடர்ந்து www.ietamil.com காணலாம்.