இந்தியா கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவில் சுற்று பயணம் செய்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்க வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகியது.
கேப்டவுனில் நடந்த முதல் போட்டியில் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி, தென் ஆப்ரிக்க வீரர்களை கட்டுப்படுத்தினர். ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை. சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறி கொடுத்தனர்.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி, இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக டாஸில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி பந்துவீச வேண்டியதுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி போலவே, வேகப்பந்து வீச்சாளர்கள் சாதிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.