கேப்டவுனில் நடைபெற்ற இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என தென்னாப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.
ஒவ்வொரு முறையும் வலிமையான இந்திய அணியைத் தான் பிசிசிஐ அனுப்பி வைக்கிறது. இருப்பினும், தென்னாப்பிரிக்க மண்ணில், குறிப்பாக டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் தோல்விகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
முதல் போட்டியில் இந்திய அணி தோற்றதற்கான காரணம் என்ன? அடுத்த போட்டியில் இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்? எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் என்னென்ன? என்பது குறித்து ஐஇதமிழ்-ன் பிரத்யேக அலசல் வீடியோ இதோ,