பேஸ்புக்கில் பிரபலமாக செயல்படும் தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தமிழ்நாடு வெதர்மேன், தனது பேஸ்புக் பக்கத்தில், நாளை (ஜன.31) விண்ணில் சூப்பர் ப்ளூ பிளட் மூன் தெரியும் என்று பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பதிவில், "31 ஜனவரி 2018 அன்று, வானில் 'சூப்பர் ப்ளூ பிளட் மூன்' தெரியும். இதனை தமிழில் 'செம நீல ரத்த நிலா' என்று அழைக்கலாம். 1982ம் வருடத்திற்கு பிறகு, 35 வருடங்கள் கழித்து, இந்தியாவின் இந்த சூப்பர் ப்ளூ பிளட் மூன் தோன்ற உள்ளது. அமெரிக்காவில் 150 வருடங்களுக்குப் பிறகு இது தோன்ற உள்ளது.
ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது பௌர்ணமியில், அதே நேரத்தில் பூமி அருகில் நிலா இருக்கும் போது, சந்திர கிரகணம் வந்தால் அதுக்கு பேர் தான் செம நீல ரத்த நிலா" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
மேலும், நாளை மாலை 6:21:47 மணி முதல் சூப்பர் ப்ளூ பிளட் மூன் சென்னையில் தெரியும் என்றும், இதனை தாராளமாக வெறும் கண்களுடன் குடும்பத்துடன் சேர்ந்து ரசிக்கலாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.