Advertisment

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு; கோவை இரவு நேர மாரத்தானில் 5000 பேர் பங்கேற்பு

கோவையில் பெண்களுக்கான இரவு நேர மாரத்தான் போட்டி; 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு; வன்கொடுமை மற்றும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி

author-image
WebDesk
New Update
Kovai Marathon

கோவையில் பெண்களுக்கான இரவு நேர மாரத்தான் போட்டி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற பெண்களுக்கான இரவுநேர மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஓடினர்.

Advertisment

கோவை வ.உ.சி மைதானத்தில் ஜெம் மருத்துவமனை மற்றும் ஜெம் பவுண்டேசன் சார்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தியும் மற்றும் புற்றுநோயால் பாதிக்கபட்டவர்களை மீட்கும் விதமாகவும் இரவு நேர மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 5000-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியில் 10 கி.மீ, 5 கி.மீ, 3 கி.மீ என மூன்று பிரிவுகளாக பெண்கள் ஓடினர்.

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இந்தியா அளவில் கோவையில் மட்டும்தான் பெண்களுக்காக நடத்தக்கூடிய மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் மாரத்தான் போட்டியில் பெண்கள் பங்கேற்று உள்ளனர். இந்த மாரத்தான் போட்டியில் வரும் வருவாய் முழுமையாக புற்று நோய்க்காக செலவு செய்யப்படும். கடந்த ஆண்டு 100 நபர்களுக்கு இலவசமாக புற்றுநோய் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது என நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான மருத்துவர் பிரவீன்ராஜ் தெரிவித்தார்.

பி.ரஹ்மான், கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore Marathon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment