நித்யா மோகனசுந்தரம்:
தேவையான பொருட்கள்:
நூல்கோல் – 100 கிராம்
கோதுமை மாவு – 1/2 கிலோ
வெங்காயம் – 1
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிது
கடுகு - சிறிது
உளுத்தம்பருப்பு – சிறிது
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் - 50 மி.லி
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
நூல்கோலை மெலிதாக நறுக்கி வேக வைக்கவும். கோதுமை மாவில் உப்பு, கொஞ்சம் எண்ணெய் சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து, ஈரத் துணியால் 15 நிமிடம் மூடி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வேக வைத்த நூல்கோல் சேர்த்து மேலும் வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து மீண்டும் சுருள வதக்கவும். பிசைந்த மாவில் கொஞ்சம் எடுத்து கிண்ணம் போல் செய்து, அதற்குள் வதக்கிய நூல்கோலை கொஞ்சம் வைத்து சப்பாத்திகளாக தேய்த்து, கல்லில் போட்டு எண்ணெய் விடாமல் சுட்டு எடுக்கவும்.
பயன்:
நூல்கோல் காயை அதிகம் விரும்பிச் சாப்பிடாதவர்கள், இதேபோல் செய்து சாப்பிடலாம். உடல் எடையைக் குறைப்பதில் நூல்கோலுக்கு முக்கிய இடம் உண்டு.