நித்யா மோகனசுந்தரம்:
தேவையான பொருட்கள்:
கீரை – ஒரு கட்டு
பனீர் (துருவியது) – 100 கிராம்
உருளைக்கிழங்கு – 1
வெங்காயம் – 2
முந்திரி – 10
சீரகம் – 1டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிது
தயிர் – அரை கப்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
கீரையையும், உருளைக் கிழங்கையையும் தனித்தனியாக வேக வைத்துக் கொள்ளவும். 1 வெங்காயத்தை மட்டும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். துருவிய பனீர், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், நறுக்கிய வெங்காயம், உப்பு ஆகியவற்றை கீரையுடன் சேர்த்து கலந்து உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு அதில் கீரை உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். இன்னொரு கடாயில், எண்ணெய் விட்டு அதில் முந்திரி பேஸ்ட், வெங்காய விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி தயிர் சேர்த்துக் கலக்கவும். அதில் பொரித்த கோஃப்தா உருண்டைகளை சேர்த்து வதக்கி, எடுத்துப் பரிமாறவும்.
பயன்:
அதிக கலோரியும் சத்தும் நிறைந்தது.