நித்யா மோகனசுந்தரம்
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் மாவு- 1கப்(வறுத்துப்பொடித்தது)
பார்லி மாவு- 1கப்
கேழ்வரகு மாவு- 1கப்
முருங்கைக்கீரை- 1கப்
சின்ன வெங்காயம்- 3
பச்சை மிளகாய்- 1
உப்பு- தேவைக்கேற்ப
எண்ணெய்- தேவைக்கேற்ப
சீரகம்- சிறிது
கறிவேப்பிலை- சிறிது
கொத்துமல்லி- சிறிது
செய்முறை:
கீரையைக் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம்,பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் அனைத்து மாவுகளையும் போட்டு கலக்கவும். கலக்கிய மாவுகளுடன் உப்பு, கீரை, வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லி ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். பிறகு சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து அடை தட்டும் பதத்தில் மாவைப் பிசைந்துகொண்டு ஈரத்துணியால் ஒரு 1/2 மணி நேரம் மூடி வைக்கவும். மாவிலிருந்து ஒரு எலுமிச்சை அளவு எடுத்து ஒரு வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி அடையாகத் தட்டவும். அடையின் எல்லா பகுதியும் சமமாக இருக்க வேண்டும். கல் காய்ந்ததும் தட்டி வைத்துள்ள அடையை எடுத்துக் கல்லில் போட்டு, அடையைச் சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும்.