நித்யா மோகனசுந்தரம்
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2
வெந்தயக்கீரை - ½ கட்டு
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 3 பல்
மஞ்சள்பொடி - சிறிது
மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்
மல்லிப்பொடி - 2 டீஸ்பூன்
சீரகம்- ½ டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 டேபூள் ஸ்பூன்
செய்முறை:
வானலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம் போடடு தாளிக்கவும். பிறகு நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் உருளைகிழங்கை போட்டு நன்றாக வதக்கவும். பிறகு தட்டிய இஞ்சிபூண்டு, மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி மற்றும் உப்பைப் போட்டு நன்றாக வதக்கவும்.
பிறகு நன்றாக கழுவிப் பிழிந்த வெந்தையக்கீறையைச் சேர்த்துக் கிளறவும். கடைசியாக தக்காளியைப் போட்டு கிளறவும். பிறகு சிறிது தண்ணீர் தெளித்து வாணலியை மூடி வைக்கவும். தண்ணீர் வற்றி உருளைக்கிழங்கு வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும். அருமையான ஆலுமேத்தி தயார். இதை சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். பயண்:
பயன்:
வெந்தையக்கீரையில் தாது உப்புக்களும், பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. அதோடு வெந்தையக்கீரையில் வைட்டமின் சியும், வைட்டமின் ஏ யும் காணப்படுகின்றன. இது நார்ச்சத்துள்ள உணவுப்பொருள் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.