துப்பாக்கி கலாச்சாரம் இப்போது பெருமளவில் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தையாக மாறி வருகிறது. அமெரிக்கா போன்ற பெரு நகரங்களில் 1 மணி நேரத்திற்கு ஒருமுறை விலையுர்ந்த துப்பாகினை வாங்குவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரம் தொற்றுநோய் போலத் பரவியுள்ளது, அது உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என பல நாட்டு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவிலும் சில பகுதிகளில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்க ஆரமித்துள்ளது. ஆனால், ஆங்கில நாளிதழ் ஒன்றில், ஒரு சாதாரணமான மனிதன், துப்பாக்கி வாங்க வேண்டும் என்றால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.
>அதன்படி, துப்பாக்கி வாங்க விரும்புபவர், முதலில் ஷூட்டிங் க்ளபில் சென்று தனது பெயரை பதிவு செய்ய வேண்டும்.
> பின்பு, நாள்தோறும் துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சி வகுப்பிற்கு செல்ல வேண்டும்.
>உடல் நலம் மற்றும் மன நலம் குறித்து மருத்துவரிடம் அறிக்கை பெற்று ஒப்படைக்க வேண்டும்.
>துப்பாக்கியை பாதுகாப்பாக வைப்பதற்கு உங்கள் வீட்டில் தனி அறை உள்ளதா? என்பதை அதிகாரிகளுக்கு காட்ட வேண்டும்.
> 3 வருடங்களுக்கு முன்பு வரை எந்த வித குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என்று உறுதி செய்ய வேண்டும்.
>பின்பு, அவர்களின் குடும்பத்தாரிடன் தனித்தனியாக விசாரணை நடத்தப்படும்.
> இவை எல்லாவற்றையும் கடந்த பின்பே, இந்தியாவில் துப்பாக்கி வாங்க முடியும்.