Advertisment

'தண்ணீர் ஏடிஎம்' கேள்விப்பட்டு இருக்கீங்களா? ஐ... நீங்க நினைக்குறது இல்ல!

மேற்கு வங்கத்தில் இன்று முதல் தண்ணீர் ஏடிஎம்கள் நிறுவப்பட உள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'தண்ணீர் ஏடிஎம்' கேள்விப்பட்டு இருக்கீங்களா? ஐ... நீங்க நினைக்குறது இல்ல!

மேற்கு வங்காள பஞ்சாயத்து மற்றும் கிராம மேம்பாட்டு மற்றும் பொது சுகாதாரம் அமைச்சர் அளித்துள்ள பேட்டியில், 'மேற்கு வங்கத்தில் இன்று முதல் தண்ணீர் ஏடிஎம்கள் நிறுவப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

அதாவது, இந்த ஏடிஎம்மில் பொதுமக்கள் மிகவும் சுத்தமான குடிநீரை பெற முடியுமாம். இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், "மேற்கு வங்கத்தில் உள்ள பள்ளிகளில் இந்த தண்ணீர் ஏடிஎம்கள் வைக்கப்பட உள்ளது. மேலும், மாநிலத்தின் நகரப் பகுதி, புறநகர் பகுதி என பல இடங்களில் இது நிறுவப்பட உள்ளது. இந்த இயந்திரங்கள் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த ஏடிஎம்மில் கிடைக்கும் தண்ணீரில் பாக்டீரியா உள்ளது என யாரேனும் நிரூபித்தால், அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் அளிக்கப்படும். முதற்கட்டமாக கொல்கத்தாவில் 50 தண்ணீர் ஏடிஎம்கள் நிறுவப்பட உள்ளோம். பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் இதனை அமைப்பதே எங்களின் முக்கிய குறிக்கோளாகும்" என்றார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment