Advertisment

காதல் விவகாரம்: நண்பனையே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த 10-ம் வகுப்பு மாணவன்

மஹராஷ்டிரா மாநிலத்தில் காதல் விவகாரம் காரணமாக 10-ஆம் வகுப்பு மாணவன் தன் நண்பனாலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IIT Chennai student stabbed

IIT Chennai student stabbed

மஹராஷ்டிரா மாநிலத்தில் காதல் விவகாரம் காரணமாக 10-ஆம் வகுப்பு மாணவன் தன் நண்பனாலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மஹராஷ்டிரா மாநிலம், சோலாபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் பைரேல். இந்த கிராமத்தில் உள்ள பள்ளியொன்றில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சுரேஷ் மற்றும் நவீன் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

இந்நிலையில், சுரேஷ் வேறொரு பள்ளியில் படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக, நவீனிடம் காதல் கடிதம் எழுதித் தருமாறு கேட்பாராம் சுரேஷ். நாளடைவில் நவீனும் அந்த மாணவி மீது காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நவீன் அந்த மாணவியை காதலிக்கும் விஷயம் தெரியவரவே, நவீனை சுரேஷ் கண்டித்துள்ளார். இந்நிலையில், சுரேஷ் தன்னுடைய மற்றொரு நண்பருடன் இணைந்துகொண்டு, கடந்த செவ்வாய் கிழமை பள்ளியில் கணினி ஆய்வகம் அருகே நவீனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து, பேருந்தில் வேறு ஊருக்கு தப்பியோட முயன்ற சுரேஷை போலீசார் கைது செய்தனர்.

Maharashtra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment