வங்கக்கடலில் உருவான ஹமூன் புயலானது தீவிர புயலாக வலுவடைந்து வருவதால் புதுச்சேரி துறைமுகத்தில் 2,எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஹமூன் புயலானது தீவிர புயலாக வலுவடைந்து வருவதால், புதுச்சேரி துறைமுகத்தில் இன்று இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
இதனிடையே ஹமூன் புயலானது, வடக்கு, அதனை ஒட்டி வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
புயல் எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரியில் கடல் சற்று சீற்றமாக காணப்படுவதால், இன்று இரண்டாவது நாளாக பெரும்பாலான விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்த்துள்ளனர்.
இதனால் மீனவர்களின் படகுகள் அனைத்தும் புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் துறைமுகத்தில் பாதுகாப்பாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“