Advertisment

தேர்தல் பத்திரங்களின் ஆதாரத்தை அறியும் உரிமை வாக்காளருக்கு இல்லையா? உச்ச நீதிமன்றம்

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்துவருகிறது.

author-image
WebDesk
New Update
Manipur, Manipur violence, Supreme Court Manipur violence, மணிப்பூரில் நடந்ததை மற்ற இடத்திலும் நடக்கிறது என கூறி நியாயப்படுத்த முடியாது, உச்ச நீதிமன்றம், மணிப்பூர் வன்முறை வழக்கு, தலைமை நீதிபதி சந்திரசூட், SC Manipur case, SC Manipur violence case, SC cases, Tamil Indian Express

வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள், தற்போதைய திட்டத்தில் உள்ள “கடுமையான குறைபாடுகளை” கவனித்து ஒரு சிறந்த தேர்தல் பத்திர திட்டத்தை உருவாக்கலாம் என்று பரிந்துரைத்தனர்.

அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரத்தை அறிய வாக்காளர்களுக்கு உரிமை இல்லை என்ற அரசாங்கத்தின் வாதத்தை ஏற்றுக்கொள்வது சற்று கடினம் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச் கூறியுள்ளது.

மேலும், தேர்தல் பத்திரத் திட்டம் 2018 இன் அரசியலமைப்பு செல்லுபடியை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்துவருகிறது.

வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள், தற்போதைய திட்டத்தில் உள்ள “கடுமையான குறைபாடுகளை” கவனித்து ஒரு சிறந்த தேர்தல் பத்திர திட்டத்தை உருவாக்கலாம் என்று பரிந்துரைத்தனர்.

மேலும், செப்டம்பர் 30, 2023 வரை பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை சமர்ப்பிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அது உத்தரவிட்டது.

இது குறித்து நீதிபதி கண்ணா, “ஏன் எல்லாவற்றையும் வெளிப்படையாக வைக்கக் கூடாது? தேர்தல் பத்திரம் மூலம் பெறப்படும் நன்கொடை அனைவருக்கும் தெரியவேண்டும். கட்சிக்கு தெரிவது வாக்காளனுக்கும் தெரிய வேண்டும்.

ஆகவே, வாக்காளர்களுக்குத் தெரிந்துகொள்ள உரிமை இல்லை என்ற உங்கள் வாதத்தை ஏற்றுக்கொள்வது சற்று கடினம்” என்றார்.

தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட், “மிக முக்கியமான மூன்று அல்லது நான்கு முக்கியமான பரிசீலனைகள் உள்ளன. தேர்தல் செயல்பாட்டில் பணத்தின் செயல்பாட்டை குறைக்க வேண்டும்.

அந்த நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட வங்கிச் சேனல்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டிய அவசியமாகும். மேலும், வெளிப்படைத்தன்மை தேவை.

இது மாநிலங்களிலோ அல்லது மத்தியிலோ அதிகார மையங்களுக்கிடையேயான க்விட் ப்ரோகோவை சட்டப்பூர்வமாக்கக் கூடாது என்பதில் ஐந்தாவது கருத்து உள்ளது” என்றார்.

இந்த அமைப்பின் குறைபாடுகள் இல்லாத மற்றொரு அமைப்பை நீங்கள் வடிவமைக்கலாம். விகிதாசார வழியில் சமநிலைப்படுத்தும் ஒரு அமைப்பை நீங்கள் இன்னும் உருவாக்கலாம். அதை எப்படி செய்வது, நீங்களே முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, சொலிசிட்டர் ஜெனரலுடன் எஸ்பிஐயின் மூத்த அதிகாரிகள் இருந்தனர்.

ஆங்கிலத்தில் வாசிக்க : Slightly difficult to accept voter has no right to know source of funding: SC to Govt on electoral bonds

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment