Advertisment

கடல் மார்க்கமாக ரூ.3500 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தல்! கப்பலை சிறைபிடித்த கடற்படை!

அந்த கப்பலில் சோதனை செய்த போது சுமார் ரூ3,500 கோடி மதிப்புள்ள 1,500 கிலோ ஹெராயின் இருப்பது தெரியவந்தது.இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
heroine

குஜராத் கடறபகுதியில் ரூ.3500 கோடி மதிப்புள்ள 1500 கிலோ ஹெராயின் கடத்திச் சென்ற கப்பலை இந்திய கடற்டையினர் சிறைபிடித்தனர்.

Advertisment

இது குறித்து தகவல் தெரிவிப்பதாவது: குஜராத் கடற்பகுதியில் கப்பல் ஒன்றில் ஹெராயின் கடத்தப்படுவதாக இந்திய கடற்படைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்திய கடற்படைக்குச் சொந்தமான சமுத்திரா பாவக் கப்பல் கடற்பகுதிக்குச் சென்று, நேற்று அந்த கப்பலை வழிமறித்தது. பின்னர், அந்த கப்பலில் சோதனை செய்த போது சுமார் ரூ3,500 கோடி மதிப்புள்ள 1,500 கிலோ ஹெராயின் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கப்பலை இந்திய கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

இவ்வளவு அதிகமான போதைபொருள் பிடிபடுவது இது தான் முதல்முறை என கூறப்படுகிறது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய கடலோர காவல் படை, சுங்கத்துறை, கடற்படையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், கப்பலில் இருந்தவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gujarat Heroin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment