காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, விமானத்தில் ஏறுவதற்காக வரிசையில் காத்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அகமதாபாத் விமான நிலையத்தில், இண்டிகோ நிறுவன விமானத்தில் ஏறுவதற்காக சக பயணிகளுடன் ராகுல் காந்தி காத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை, இண்டிகோ நிறுவனம் தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “வெல்கம் மிஸ்டர் ராகுல் காந்தி, உங்கள் பயணம் இனிதாகட்டும்”, என அவரது புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளது.
ஏற்கனவே, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, டெல்லியில் உள்ள ஏ.டி.எம். ஒன்றில் ரூ.4,000 எடுப்பதற்காக பொதுமக்களுடன் காத்திருந்த புகைப்படம் வெளியானது.