Advertisment

நோயாளியின் துண்டிக்கப்பட்ட காலை தலையணையாக்கிய மருத்துவ ஊழியர்கள்!

இளைஞருக்கு தலையணை கொடுப்பதற்கு பதிலாக, அவரின் காலையே தலையணையாக வைத்துள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நோயாளியின் துண்டிக்கப்பட்ட காலை தலையணையாக்கிய மருத்துவ ஊழியர்கள்!

உத்திரபிரதேசம் என்ற பெயரைக் கேட்டாலே இப்போதெல்லாம், திகிலாகவே இருக்கிறது. நாட்டில் ரயில் விபத்து என்று செய்தி வந்தாலே, அது உ.பி.யாகத் தான் இருக்கும் என்று நாமே கணித்துவிடலாம். அதேபோல், மருத்துவ விபத்து என்றாலும் சரி, சளைக்காமல் மோசமான பெயரை எடுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே உ.பி., மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாததால் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தது நினைவிருக்கலாம்.

Advertisment

இந்த நிலையில், உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று விபத்தில் சிக்கிய நிலையில், உ.பி., மாநில அரசின் கீழ் செயல்படும் மஹாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் சிக்கிய இளைஞர் பள்ளி ஒன்றில், ஓட்டுனர் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

விபத்தில் பலத்த காயம் அடைந்த அவருக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் முதலுதவி அளிக்கப்பட்டது. விபத்தில் சிக்கியதில், அவரின் இடது கால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனால், அவரின் காலை மருத்துவர்கள் துண்டித்து எடுத்துள்ளனர். அதன்பின், அவரை கேஷுவல் வார்டுக்குள் அனுமதித்தனர். அப்போது, அதே மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள், அந்த இளைஞருக்கு தலையணை கொடுப்பதற்கு பதிலாக, சிகிச்சையில் துண்டித்து எடுத்த அவரின் காலையே தலையணையாக வைத்துள்ளனர். இந்த சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த, நான்கு பேர் அடங்கிய சிறப்பு குழு ஒன்றை அமைத்து விசாரித்து வருகின்றனர். மேலும், நான்கு மருத்துவமனை ஊழியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

 

Uttar Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment