Advertisment

வைரலாகும் வீடியோ: குடி போதையில் சிங்கத்துடன் சண்டையிட சென்ற வாலிபர்!

இந்த வாலிபரை காணவில்லை என்று அவர்களின் உறவினர்கள் பத்திரிக்கைகளில் விளம்பரம் அளித்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வைரலாகும் வீடியோ: குடி போதையில்  சிங்கத்துடன் சண்டையிட சென்ற வாலிபர்!

கேரளாவில் வாலிபர் ஒருவர், மது போதையில் சிங்கத்துடன் சண்டையிட சென்ற சம்பவம் இணையதளங்களில் வேகமாக பரவு வருகிறது.

Advertisment

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற மிருகக்காட்சி சாலை ஒன்று உள்ளது. இங்கு நாள்தோறும் சுற்றுலாவாசிகள் வந்து செல்வது. இந்நிலையில், சம்பவதன்று,  வாலிபர் ஒருவர், மிருக காட்சி சாலையில் அமைந்துள்ள சிங்கக் கூண்டு அருகில் சென்றுள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் அனைவரும்  வாலிபர் சிங்கத்தை புகைப்படம் எடுப்பதற்காக  அவர் அருகில் செல்வதாக எண்ணி அமைதியாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், திடீரென்று அந்த நபர், சுவர் ஏற் குதித்து சிங்கம் இருக்கும் கூண்டுக்குள் நுழைய முயன்றுள்ளார். மேலும், அவர் குதித்த கூண்டு குட்டி சிங்கமும் ஒன்று இருந்துள்ளது. குடி போதையில் அந்த வாலிபர் சிங்கத்தை போல் கத்தி, அதை சண்டைக்கு இழுத்துள்ளார். கோபடம் அடைந்த அந்த குட்டி சிங்கம் பயங்கரமாக கர்ஜித்துள்ளது. இதைப் பார்த்த சுற்றூலா பயணிகள் அனைவரும் தங்களின் மொபைல்களில் வீடியோ எடுக்க ஆரம்பித்துள்ளனர்.

தகவலறிந்து, சிங்கம் கூண்டிற்குள் வந்த பாதுகாவலர்கள், குட்டி சிங்கத்திற்கு உணவு அளிப்பது போல் திசை திருப்பிவிட்டு, அந்த வாலிபரை தரதரவென இழுத்து வந்துள்ளனர். பின்பு அவரை போலீசாரிடன் ஒப்படைத்துள்ளனர். போலீஸ் விசாரணையில், அந்த நபர் அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததால் இவ்வாறு நடந்துக் கொண்டதாக கூறியுள்ளார்.

மேலும், இந்த வாலிபரை காணவில்லை என்று அவர்களின் உறவினர்கள் பத்திரிக்கைகளில் விளம்பரம் அளித்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

,

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment