Advertisment

அமலாக்கத்துறை முன்பு லாலு மகள் ஆஜர்

பிகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகள் அமலாக்கத்துறை முன்னிலையில் ஆஜரானார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
அமலாக்கத்துறை முன்பு லாலு மகள் ஆஜர்

பிகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகள் அமலாக்கத்துறை முன்னிலையில் ஆஜரானார்.

Advertisment

ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான மிசா பாரதியின் வீட்டில் கடந்த 8-ம் தேதி அமலாகத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் நடைபெற்ற சிபிஐ சோதனையை தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் அவரது மகள் வீட்டில் அமலாக்கத்துறையினரின் சோதனை நடைபெற்ற சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தின.

டெல்லியில் உள்ள மிசா பாரதியின் சைனிக் பண்ணை வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களிலும், அவரது கணவரின் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் அமலாகத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

ஷெல் நிறுவனங்கள் மூலம் சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சுரேந்திர குமார் ஜெயின், விரேந்திர ஜெயின் சகோதரர்கள் கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அதேபோல், கடந்த மே மாதம் சார்ட்டட் அக்கவுண்டன்ட் ராஜேஷ் அகர்வால் என்பவரை அமலாக்கத்துறை கைது செய்தது.

ரூ.8000 கோடி பண மோசடி வழக்கில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. அதன் தொடர்ச்சியாக, மிசா பாரதியின் வீட்டில் அமலாகத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில், மிசா பாரதி இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதனடிப்படையில், அமலாக்கத்துறை முன்னிலையில் மிசா பாரதி ஆஜரானார்.

Delhi Bihar Lalu Prasad Yadav Misa Bharti
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment