ஜம்மு காஷ்மீரின் டிரகாட் மற்றும் சோபியான் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஏழு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள தியால்கிராம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
இதேபோல், சோபியான் மாவட்டத்திலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கும் பாதுகாப்பு படை அதிகாரிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஏழு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.